Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்: தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம்

ஜுலை 19, 2019 05:08

கும்பகோணம்: கும்பகோணத்தில்
தொழிலாளர்கள் பிரச்சினை, மக்கள் பிரச்சினை மற்றும் கழகம் கையில் எடுக்கும் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் சண்முகம்  தெரிவித்தார். 

கும்பகோணத்தில் பழைய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக மகாமகக் குளம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு தொண்டர்கள் புடை சூழ அவர் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர்

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட  செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம்,தொமுச பொதுச் செயலாளர் பாண்டியன் மாவட்ட பொருளாளர் செழியன் மாவட்ட பொதுச் செயலாளர் குமார்  நகர செயலாளர் சுப.தமிழழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மாநிலங்களவை உறுப்பினர் சண்முகத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்
பின்னர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள தொ.மு.ச. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினனார்.

அப்பொபொது அவர்கூறியதாவது: தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பிரச்சினை, அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மாநிலங்களவையில் அனைவரும் குரல் எழுப்புவோம் அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்துவோம்.

இனியும் காலதாமதம் படுத்தினால் வேலூர் பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன்  தமிழகம் முழுவதும் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம். 

காவிரி நீர்ப் பிரச்சினை, காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் மக்களுக்காக தளபதி ஸ்டாலின் மேற்கொள்ளும் போராட்டங்கள் குறித்தும் மாநிலங்களவையில் குரல் எழுப்புவோம் என சண்முகம் மாநிலங்களவை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்